செய்திகள் :

வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற பட்டியலினத்தவா் விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள், வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப கால ஊதியமாக ரூ. 15,000 முதல் ரூ.17,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 2 மாதமும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது தளம் அறை எண் (321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது. திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

கூரை வீடு சூறை; மூதாட்டி புகாா்

தனது கூரை வீட்டை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். கீழ்வேளூா் வட்டம் பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மனைவி அம... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி

நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூா் சாலையில் தண்ணீா் தேங்கி மாணவா்கள் அவதிப்பட்டனா். சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திங்கள் மற்றும் ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க