செய்திகள் :

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

post image

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் -2 இணைந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இந்த வாரம் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக திங்கள் - வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகவுள்ளது.

எனினும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் -2 தொடர் தொடர்ந்து தனது புள்ளிகளை அதிகரித்து வருகிறது. 27வது வாரத்தில் 8.36 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றிருந்தது. 28வது வாரத்தில் 8.49 புள்ளிகளாக அதிகரித்த நிலையில், இந்த வாரத்தில் 8.90 புள்ளிகளாக டிஆர்பி அதிகரித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக எதிர்நீச்சல் -2 தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதால், மீண்டும் பழைய நிலைக்கு எதிர்நீச்சல் வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் முதல் பாகமானது, மற்ற தொடர்களை பின்னுக்குத்தள்ளி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், எதிர்நீச்சல் -2 தொடரானது, டாப் 5 இடங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் -2 தொடரில் பார்வதி, கனிஷ்கா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர்.

தற்போது, ஆதி குணசேகரன் மகனின் காதல் - திருமணம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுவருவதால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

The TRP for the serial ethirneechal -2 has reached its peak in the last three weeks.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் ப... மேலும் பார்க்க

சின்ன திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் பார்த்திபன்!

சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ... மேலும் பார்க்க

தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்... மேலும் பார்க்க

கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த... மேலும் பார்க்க

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை: நெய்மர்

சன்டோஷ் அணியில் கடைசி போட்டியில் அசத்தலாக விளையாடிய நெய்மர் தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் சமீபத்தில் தனது சிறுவயது கால்பந்து அணியான சன்... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ... மேலும் பார்க்க