செய்திகள் :

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை: நெய்மர்

post image

சன்டோஷ் அணியில் கடைசி போட்டியில் அசத்தலாக விளையாடிய நெய்மர் தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் சமீபத்தில் தனது சிறுவயது கால்பந்து அணியான சன்டோஷ் அணியில் இணைந்தார்.

சௌதி லீக்கில் காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். சமீபத்திய போட்டிய ஒன்றில் ரசிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் நெய்மர் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடைசி போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியை 3-1 என வெற்றிப்பெற செய்தார். மொத்தமாக 445 கோல்கள், 257 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார்.

இந்தப் போட்டியைப் பார்க்க கார்லோ அன்செல்லாட்டியின் குழுவைச் சேர்ந்த சிலர் வந்திருப்பதாகக் கூறப்பட்டது. நெய்மர் உடல்தகுதியுடன் இருந்தால் பிரேசில் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நெய்மரிடம் கேள்விக் கேடகப்பட்டபோது, “நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை” எனக் கூறினார்.

பிரேசிலின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டோரிவல், “சொந்த அணியினரே நெய்மரின் முக்கியத்துவம் பற்றி அணியில் பேசுகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.

தற்போது, புதிய பயிற்சியாளராக ரியல் மாட்ரிட்டின் கார்லோ அன்செலாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Neymar’s possible return to Brazil’s national team has been a talking point since the forward returned to his boyhood club Santos at the start of 2025.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் ப... மேலும் பார்க்க

சின்ன திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் பார்த்திபன்!

சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ... மேலும் பார்க்க

தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்... மேலும் பார்க்க

கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த... மேலும் பார்க்க

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ... மேலும் பார்க்க