செய்திகள் :

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

post image

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் கங்கையில் உண்டான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், உத்தரகாசி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவினர், மேகவெடிப்புக்கு பின் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதில், 20 பேர் மகாராஷ்டிரத்தில் குடியேறியவர்கள் எனவும், மீதமுள்ள 8 பேர் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மாயமான சுற்றுலாப் பணிகளின் உறவினர் ஒருவர் கூறுகையில், இறுதியாக அவர்கள் அனைவரும் நேற்று (ஆக.5) காலை 8.30 மணியளவில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியதாகவும், அதையடுத்து, அவர்களது பயண வழியில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்பு, அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த ஹரித்வாரைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்துக்கு அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆக.5 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட மேகவெடிப்பினால் உண்டான இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்

A tourist group of 28 people from Kerala have reportedly gone missing in a cloudburst disaster in Uttarakhand.

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க