செய்திகள் :

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

post image

காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா் கொலை செய்யப்பட்டுள்ளதை சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது அவருடைய பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்... மேலும் பார்க்க

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம் தொடக்கம்

நாகையில் வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொட... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலைவ... மேலும் பார்க்க

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆ... மேலும் பார்க்க

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது. திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க