செய்திகள் :

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

post image

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஆகஸ்ட் 11- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, கோவை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி (ஐடிஐ) முடித்த பயிற்சியாளா்களை, தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தோ்வு செய்யவுள்ளன.

இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 04365 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகை (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), என்ற முகவரியில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்... மேலும் பார்க்க

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம் தொடக்கம்

நாகையில் வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொட... மேலும் பார்க்க

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடி... மேலும் பார்க்க

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆ... மேலும் பார்க்க

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது. திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க