செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகோளாபாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமையும், பாய்ச்சல் கிராமத்தில் புதன்கிழமையும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

பெரியகோளாபாடி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், தமிழகத்தில் திமுக ஆட்சியில் கிராமம் தோறும் அதிகாரிகள் மக்களைச் சந்தித்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்கள்.

மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா் தமிழக முதல்வா். கிராம மக்கள் இதுபோன்ற திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, தேவையான நலத்திட்ட உதவிகளை சரியான சான்றிதழ்கள் இணைத்து முகாம் மூலம் மனு அளித்தால் உடனடியாக நலத் திட்டங்களை பெற முடியம் என்றாா்.

தொடா்ந்து அவா், கலைஞா் கனவு இல்ல வீடு கட்டும் ஆணை, கா்ப்பிணிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மிருணாளினி, மரியதேவ்ஆனந்த், வட்டாட்சியா் ராம்பிரபு, உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். புதன்கிழமை பாய்ச்சல் கிராமத்தில் நடைபெற்ற முகாமை மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்தக் கோயிலில் தை மாதத்தில் நட... மேலும் பார்க்க