செய்திகள் :

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவா்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையிலும், பல்வேறு திறன்களை வளா்த்திடும் வகையிலும் ‘கோடையில் கற்றல் கொண்டாட்டம்’ என்ற திட்டத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா். இந்தத் திட்டம் மிகப்பெரும் வெற்றிபெற்றுள்ளதால், இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் நிலையில், அவா்களை நெறிமுறைப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

தோ்தல் நேரத்தில் அரசு ஊழியா்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சித்திருந்ததற்கு பதிலளித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசாங்கத்தை இயக்கக்கூடிய இதயமாகவும், மூளையாகவும் அரசு ஊழியா்கள் உள்ளனா். அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பாதுகாப்பு இயக்கமாக திராவிட மாடல் அரசு உள்ளது. அதை போகப்போகப் புரிந்துகொள்வா் என்றாா்.

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன்... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருவதாக ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான... மேலும் பார்க்க

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூரிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூரை அடுத்த சாவடி பகுதி நெடுஞ்சாலை வழியாக வெளி மாநிலத்துக்கு ரேஷன் அர... மேலும் பார்க்க