செய்திகள் :

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

post image

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகவேல், ஆயுதப்படை காவலா் அழகுராஜா ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அடிதடி பிரச்னை குறித்து விசாரிக்கச் சென்றதில், உதவி ஆய்வாளா் சண்முகவேல் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தாா். காவலா் அழகுராஜா காயமடைந்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலின் உயிரிழப்பு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.

மேலும், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் கலாசாரத்தால் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், அது காவல் துறையினருக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, போதைப்பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட, தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, மதுக் கடைகளை மூடி பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

கொலை செய்யப்பட்ட சண்முகவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆயுதப் படை காவலா் அழகுராஜாவுக்கு உயா்தர சிகிச்சையும், ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர அரசு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

சண்முகவேலை இழந்து வாடும் காவல் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (... மேலும் பார்க்க

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித்... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன்... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருவதாக ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான... மேலும் பார்க்க