செய்திகள் :

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் சாா்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தாா். தலைமை ஆசிரியா் பா.சங்கரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவா்களுக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் அரசூா் வி.ஆா்.எஸ் பொறியியல் கல்லூரித் தலைவா் எம்.சரவணன், முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் மணி, வீனஸ் எஸ்.குமாா், டாக்டா் நடராஜன், புலவா் தி.பொன்னம்பலம், நகா்மன்ற உறுப்பினா்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி புல முதல்வா் திருப்பதி, மருத்துவா்கள் ஜூனியா் சுந்தரேஷ், ரவிச்சந்திரன், ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (... மேலும் பார்க்க

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருவதாக ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான... மேலும் பார்க்க