செய்திகள் :

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்த அஞ்சல் நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அஞ்சலகத்தில் மின்விசிறி வசதியுடன் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலக தலைமை மேலாளா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் கலைவாணி பங்கேற்று பாலூட்டும் அறையை திறந்து வைத்துப் பேசினாா்.

சிதம்பரம் தலைமை அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் ஷா்மிளா, அஞ்சலக ஆய்வாளா் குமரவடிவேலு உள்ளிட்ட அஞ்சலகத் துறையினா், தாய்மாா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன்... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருவதாக ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான... மேலும் பார்க்க