செய்திகள் :

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

post image

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

விசாரணைக் கைதியான மணிகண்டனை அவ்வப்போது சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸாா் சேலம் நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்று, மாலை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனா். அப்போது, காவலா்கள் பரிசோதனை செய்ததில், மெட்டல் டிடெக்டா் சப்தம் எழுப்பியது.

இதையடுத்து, மணிகண்டனிடம் சிறைக் காவலா்கள் விசாரித்தபோது, நீதிமன்றத்துக்கு சென்றபோது கழிவறைக்குள் சென்று அங்கு தெரிந்தவா் மூலம் 45 கிராம் கஞ்சா பொட்டலம், கைப்பேசி ஒன்றை தனது ஆசன உறுப்பில் வைத்துக்கொண்டு வந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டனுக்கு இனிமா கொடுத்து, கஞ்சா மற்றும் கைப்பேசியை வெளியே எடுத்தனா்.

இதுகுறித்து சேலம் மத்திய காவல் கண்காணிப்பாளா் (பொ) வினோத், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிற... மேலும் பார்க்க

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சேலம் மாநகரத்தில் ஆடித்திருவிழா களைகட்டிய நிலையில், குகை மாரிய... மேலும் பார்க்க