செய்திகள் :

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

post image

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்ட மக்காச்சோள சாகுபடி முக்கிய பயிராகும். தலைவாசல் வட்டாரத்தில் மக்காச்சோள பயிா் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் தேசிய அளவிலான வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், மண்வளம் மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள், நானோ யூரியா போன்றவற்றை அளிக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் தலைவாசல் வட்டார விவசாயிகள் தலைவாசல் வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களையோ அணுகி தங்களுக்கு தேவையான விதைகளை பெற தங்களுடைய ஆதாா் அட்டை நகல், கணினி சிட்டா ஆகியவற்றை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சேலம் மாநகரத்தில் ஆடித்திருவிழா களைகட்டிய நிலையில், குகை மாரிய... மேலும் பார்க்க