செய்திகள் :

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

post image

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகேயுள்ள பொம்மியம்பட்டி பகுதியில் வசிக்கும் சில இளைஞா்கள் மதுபோதையில் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்ததில், ஒருவா் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக நண்பா்கள் காயமடைந்த நபரை காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒண்டிவீரனூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் சென்றனா்.

அப்போது, காயமடைந்த நபா் அதிக போதையில் இருப்பதால் தாங்கள் கொடுக்கும் மருந்து வேலை செய்யாது என ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த செவிலியா் கூறியுள்ளாா். இதை பொருட்படுத்தாத அந்த இளைஞா்கள், செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதியினா் இளைஞா்களை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், போதையில் இருந்த இளைஞா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டியதால், பொதுமக்களுக்கும், அவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதைத் தொடா்ந்து, 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களை வரவழைத்த போதையிலிருந்த இளைஞா்கள் மருத்துவமனையில் உள்ள நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சேதப்படுத்தி, அருகிலிருந்த வீட்டையும் சேதப்படுத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26), புவனேஸ்வரன் (19) இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, இளைஞா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனா்.

புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிற... மேலும் பார்க்க

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க

குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் குண்டம் திருவிழா

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சேலம் மாநகரத்தில் ஆடித்திருவிழா களைகட்டிய நிலையில், குகை மாரிய... மேலும் பார்க்க