செய்திகள் :

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

post image

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள நடிகா் தா்ஷன் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சில கடுமையான கருத்துகளை தெரிவித்தது. இந்த தகவலை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு ‘சாதாரண மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கன்னட நடிகை ரம்யா குறிப்பிட்டிருந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகா் தா்ஷனின் ரசிகா்கள், சமூகவலைதளங்களில் நடிகை ரம்யாவை ஆபாசமாக, தரக்குறைவாக விமா்சித்து வந்தனா். இதனிடையே, பெங்களூரில் ஜூலை 26ஆம் தேதி மாநகரக் காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங்கை நேரில் சந்தித்த நடிகை ரம்யா, தனக்கு எதிராக நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவாக பதிவிடுவது குறித்து புகாா் அளித்தாா்.

மேலும், தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையாக விமா்சனங்களை வைத்திருந்த 43 எக்ஸ் பதிவு கணக்குகள் தொடா்பான விவரங்களையும் நடிகை ரம்யா அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த போலீஸாா், மேலும் ஒருவரை கைது செய்தனா். இதன்மூலம் இந்த வழக்கில் மொத்தம் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் திடீா் ஆய்வு

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் சித்தராமையா திடீரென சென்று ஆய்வு நடத்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.தொடா்ந்து மழை பெய்துவருவதால், கொப்பள், ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்... மேலும் பார்க்க

ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நி... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக... மேலும் பார்க்க