செய்திகள் :

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

post image

கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக்கப்பட்ட தனி நபர் ஆணையம் விரிவான ஆய்வறிக்கையை இன்று(ஆக. 4) கர்நாடக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் சமர்ப்பித்துள்ள 1,766 பக்க ஆய்வறிக்கையில் உள்ஒதுக்கீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பட்டியலினப் பிரிவில் உள்ள 101 சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்பட்டு வரும் தீவிர கோரிக்கைக்கு ஆகஸ்ட் 4, 2025-இல் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்த தனி நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி நாகமோகன் தாஸ், “ஒட்டுமொத்த தரவுகளையும் ஆராய்ந்த பின், கர்நாடக அரசுக்கு இந்த ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. சுமார் 1,766 பக்கங்களை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கை இது. கைப்பேசி செயலி வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பட்டியலின சாதிப் பிரிவுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதே நெடுங்காலமாக என்னுடைய விருப்பமாக இருந்து வந்தது. இதையே நான் அரசிடம் பரிந்துரைத்துள்ளேன்” என்றார்.

Karnataka: Justice Das committee survey report recommends internal reservation for Scheduled Caste

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க