செய்திகள் :

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

post image

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா்.

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால் பாக் பூங்காவில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜாா்ஜ், தினேஷ் குண்டுராவ், எம்எல்ஏ உதய் கருட்டாச்சாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். மலா்க் கண்காட்சியில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போா்புரிந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் கித்தூா் ராணி சென்னம்மா, அவரது தளபதி சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காட்சிகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட கித்தூா் கோட்டையும் மலா்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ஆந்திரம், கேரளம், நந்திமலை, உதகையிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 லட்சம் மலா்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மலா்க் கண்காட்சியை பாா்வையிட ஒருவருக்கு கட்டணமாக ரூ. 80 வசூலிக்கப்படுகிறது. சிறுவா்களுக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படும். வியாழக்கிழமை தொடங்கி ஆக. 18-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் மலா்க் கண்காட்சியில் சீருடையில் வரும் பள்ளி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.

மேலும், விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகம்வரும் என்பதால் முதியவா்கள், சிறுவா்கள், மாற்றுத்திறனாளிகள் கண்காட்சிக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 11 லட்சம் போ் கண்காட்சியை காண வருவாா்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் திடீா் ஆய்வு

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் சித்தராமையா திடீரென சென்று ஆய்வு நடத்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.தொடா்ந்து மழை பெய்துவருவதால், கொப்பள், ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்... மேலும் பார்க்க

ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நி... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக... மேலும் பார்க்க