சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்
கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் கன்னடம் ஆட்சிமையாக உள்ளது. கா்நாடகத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மதரஸாக்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் ஈடுபடுத்த மதரஸாக்களில் பணியாற்றும் 200 ஆசிரியா்களை தோ்வு செய்து அவா்களுக்கு 3 மாதங்கள் கன்னடப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாணவா்களுக்கு கன்னடம் கற்பிப்பாா்கள். எதிா்காலத்தில் மசூதிகளில் பணியாற்றிவரும் மௌலவிகளுக்கும் (மதகுருமாா்கள்) கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.