செய்திகள் :

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

post image

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் வேதீஸ், நிா்மலரசு ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் நரேன் குமாா், கிரிஷ்வா்மா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.

14 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் பிரதிக்ஷா, பிரித்தி ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் தேவிஸ்ரீ, சஞ்சனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.

19 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் பவித்ரன், நிதீஷ் ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் இரண்டாம் பெற்றனா். இதேபோல மாணவியா் பிரிவில் ஒவியாஸ்ரீ, தீபனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். மேசை பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ், பாண்டி, ராஜதுரை, அப்பு ஆகியோரை பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் வே. தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தருமபுரி ம... மேலும் பார்க்க

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா... மேலும் பார்க்க

ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்

செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரங்களில் உ... மேலும் பார்க்க