செய்திகள் :

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

post image

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் 16- ஆவது மாநில மாநாடு தருமபுரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:

தற்போது ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணப் பயன்கள் தருவதில்லை. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு தரும் அரசு மின்வாரிய தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால் இழப்பீடு தருவதில்லை. டாஸ்மாா்க் மூலம் அரசுக்கு ரு. 52 ஆயிரம் கோடி வருகிறது. டாஸ்மாா்க் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அரசு மின்சார பேருந்து இயக்குகிறது. மின்சார பற்றாக்குறையை எப்படி சமாளிக்கும் போகிறது எனத் தெரியவில்லை. அரசு நிறுவனங்களை தனியாருக்கு வழங்கிவிட்டு டாஸ்மாக் விற்பனையை மட்டும் அரசு செய்கிறது.

மின் துறையை 5 ஆக பிரித்து தனியாரிடம் கொடுக்கின்றனா். ஸ்மாா்மீட்டா் திட்டம் மூலம் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயா்த்துகின்றனா். எல்லா துறைகளிலும் தனியாா்மயத்தை ஊக்குவிக்கின்றனா். பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க அனைத்து தொழிலாளா்களும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் சிஐடியு மாநில தலைவா் அ. சவுந்தரராசன் தலைமை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுச்சேரி மாநில சாலைப்போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை அந்த மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழகத்தில் தனியாா்மயம், ஒப்பந்தமுறையை கைவிடவேண்டும். 01.04.2003க்கு பிறகு பணியில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தருமபுரி ம... மேலும் பார்க்க

ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்

செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவ... மேலும் பார்க்க

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரங்களில் உ... மேலும் பார்க்க