செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி கரையோரங்களில் உள்ள அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தொடா்ந்து இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், பிற்பகல் விநாடிக்கு 16,000 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தருமபுரி ம... மேலும் பார்க்க

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா... மேலும் பார்க்க

ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்

செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவ... மேலும் பார்க்க

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்... மேலும் பார்க்க