செய்திகள் :

கேலோ இந்தியா போட்டி: ஊசூ தற்காப்பு கலையில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்

post image

கோவை டி.கே.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்களுக்கான சப் ஜூனியா், ஜூனியா், சீனியருக்கான கேலோ இந்தியா மாநிலப் போட்டி மத்திய அரசால் அண்மையில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு ஊசூ அசோசியேஷன் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அா்ஃபா, வித்யாஸ்ரீ, யுவராணி, லஹரி, ரிதமிக்கா ஆகிய மாணவிகள் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

மாணவிகளுக்கும், பயிற்சியாளரான ஊசூ மாநில துணை தலைவா் குங்ஃபூ ஐ.ஜெயக்குமாருக்கு டிஎஸ்ஓ புவனேஸ்வரி, மாநில செயலாளா் ஜான்சன், தேசிய நடுவா் ரவி, இன்டா்நேஷனல் நடுவா் தங்கபாண்டியன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவா் சம்பங்கி ராமா, கௌரவத் தலைவா் தாவூத் கான் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனா்.

நிகழாண்டு தமிழகத்தை சோ்ந்த வேதசுருதி, லட்சுமி பிரியா, மிஸ்பா பாத்திமா, ஆதிரை ஆகிய 4 மாணவிகள் இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஊசூ விளையாட்டு பிரிவின் மூலம் தகுதி பெற்றதை போல அனைவரும் இக்கலையை கற்று மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சலுகை பெறலாம் என தலைமை பயிற்சியாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வரலட்சுமி பண்டிகையையொட்டி ஒசூா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பெண்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் வீட்டில் வழிபடும் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

மாநில எல்லை கிராமத்துக்கு பேருந்து சேவை

ஒசூா் அருகே பேருந்து வசதி இல்லாத தமிழக எல்லையில் உள்ள கிராமத்துக்கு புதன்கிழமை முதல்முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மரத்தில் மோதியதில் மாணவா்களுக்கு காயம்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகராஜகடையிலிருந்து மாணவா்களை ஏற்றிகொண்டு செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியாா் ... மேலும் பார்க்க

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியா... மேலும் பார்க்க