மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயி...
அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. கிருஷ்ணன் பிறப்பு, அம்பிகை அம்பாள் திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், அம்மன் பிறப்பு, பாவடை பரம கேது நாடகங்களும், கோலாட்டம், வானவேடிக்கை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவி‘ன் முக்கிய நிகழ்வான மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. இதில், அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துாா், பெரியமுத்துாா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெண் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் மற்றும் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி மற்றும் பொன்கரகமும் இணைந்து அவதானப்பட்டி மேம்பாலம் அருகில் தலைகூடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 20 அடி வரை அலகு குத்திக்கொண்டும், காளி மற்றும் அம்மன் வேடம் அணிந்தும் தீச்சட்டி ஏந்தியும் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பெண்கள் மாவிளக்கை ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து வேண்டுதல் நிறைவேற்றினா். மேலும், ஏராளமான பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
படவிளக்கம் (6கேஜிபி5):
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழாவில் பல்லக்கில் உலா வந்த மாரியம்மன்.