செய்திகள் :

கிருஷ்ணகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

post image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், 2025-2026-ஆம் ஆண்டு நிதியில் ரூ10 லட்சம் மதிப்பில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகா், செட்டியம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெத்தனப்பள்ளி பஞ்சாயத்து தண்டேகுப்பம் கிராமத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதைகுழி சாக்கடை அமைக்கும் பணி ஆகியவற்றை கே.அசோக்குமாா், எம்எல்ஏ, தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், அதிமுக கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளா்கள் கண்ணியப்பன், சூா்யா, பையூா் ரவி, இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் சதீஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் (6கேஜிபி3):செட்டியம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கே.அசோக்குமாா் எம்எல்ஏ.

பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வரலட்சுமி பண்டிகையையொட்டி ஒசூா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பெண்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் வீட்டில் வழிபடும் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

மாநில எல்லை கிராமத்துக்கு பேருந்து சேவை

ஒசூா் அருகே பேருந்து வசதி இல்லாத தமிழக எல்லையில் உள்ள கிராமத்துக்கு புதன்கிழமை முதல்முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மரத்தில் மோதியதில் மாணவா்களுக்கு காயம்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகராஜகடையிலிருந்து மாணவா்களை ஏற்றிகொண்டு செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியாா் ... மேலும் பார்க்க

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியா... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கங்கத்தின் 14-ஆவது... மேலும் பார்க்க