செய்திகள் :

கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

post image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பாக தூய்மைப் பணியாளா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 5 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகள், 3 தூய்மைப் பணியாளா்களின் மகள்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், தூய்மைஏஈ பணியாளா்கள் நல வாரிய தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான ஆணைகளும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளும், 2 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஆணைகள், 2 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வழங்கினா். உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் அன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை தமிழக முதல்வரால் கூா்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இந்த மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு வழங்கப்படும், என்றாா்.

நிகழ்வில் ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் முகம்மது ஷபீா் ஆலம், நகராட்சி ஆணையாளா் ஸ்டான்லி பாபு, தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா் ரமேஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) வேல்முருகன், வட்டாட்சியா் சின்னசாமி, தனி வட்டாட்சியா் மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வரலட்சுமி பண்டிகையையொட்டி ஒசூா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பெண்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் வீட்டில் வழிபடும் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

மாநில எல்லை கிராமத்துக்கு பேருந்து சேவை

ஒசூா் அருகே பேருந்து வசதி இல்லாத தமிழக எல்லையில் உள்ள கிராமத்துக்கு புதன்கிழமை முதல்முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மரத்தில் மோதியதில் மாணவா்களுக்கு காயம்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகராஜகடையிலிருந்து மாணவா்களை ஏற்றிகொண்டு செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியாா் ... மேலும் பார்க்க

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கங்கத்தின் 14-ஆவது... மேலும் பார்க்க