பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம்
பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கங்கத்தின் 14-ஆவது மாவட்ட கூட்டம், கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளா் கவிமணிதேவி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராதிகா, துணைத் தலைவா் கிரிஜா, மாவட்டச் செயலாளா் ராதா, உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பொது இடங்களிலும், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் கமிஷனை அரசு ஏற்படுத்த வேண்டும். கெளரவக் கொலை, வரதட்சணை உயிரிழப்பு, கட்டாய திருமணம் போன்ற வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தி, வேலையின்மையை போக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தை நகா்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். சுய உதவிக்குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.