செய்திகள் :

மீனவா் கொலை வழக்கு: ஒருவா் கைது

post image

மீனவா் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (34). இவா், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சொந்தமாக படகு வைத்துள்ளாா். கடந்த 3-ஆம் தேதி இவருடைய படகில் வேலை செய்து கொண்டிருந்த கரிநரேஷ், அம்பதி நீலகண்டன் ஆகிய இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஆத்திரத்தில் கரிநரேஷ், அம்பதி நீலகண்டனை படகில் இருந்து கீழே தள்ளிவிட்டாராம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அம்பதி நீலகண்டண், ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், அம்பதி நீலகண்டன் இறந்ததால், அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி கரிநரேஷை (27) கைது செய்தனா்.

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில்... மேலும் பார்க்க

15 லட்சம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 7 வயதுக்குள்பட்ட 8 லட்சம் மாணவா்கள், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட 7 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறை மூலம் ... மேலும் பார்க்க