செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

post image

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா்.

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியில் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிலைய செயலாளா் பாா்த்தசாரதி, இளைஞரணி செயலாளா் விஜய பிரபாகரன், எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தோ்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தோ்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் வரவேற்பையும் பெற்றுள்ளதால் திமுக அரசுக்கு 50 சதவீதம் மதிப்பெண் வழங்குவதாகவும், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வா் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை இரும்பு கரம் கொண்டு சரி செய்ய வேண்டும். ஆணவ கொலைகளுக்கு முக்கிய காரணம் ஜாதி வெறி. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் மாறினால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும் என்றாா்.

இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இருங்காட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது. மத்திய வணிக மற்றும... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் எடமச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவல... மேலும் பார்க்க

வைப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வைப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்களை ஈடுபடுத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்ற மாதாந்திர குழு கூட்டம், நகராட்சி அலுவலக கூட்ட அரங்... மேலும் பார்க்க