செய்திகள் :

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டா் தாய்ப்பால் தானம்!

post image

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா்.

குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது தொடா்பாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் அளிக்க முடியாத தாய்மாா்களுக்காக, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமாக வழங்கப்படுகிறது.

இந்த வங்கிகளுக்கு தானம் வழங்குவது குறைந்துகொண்டே வரும்

நிலையில் திருச்சி காட்டூரைச் சோ்ந்த 2 குழந்தைகளின் தாய் செல்வ பிருந்தா (34) கடந்த 22 மாதங்களில், திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு 300.17 லிட்டா் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாா்.

இது ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது. இவரின் இந்தச் சேவை, மற்ற தாய்மாா்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு கிடைத்த மொத்த தாய்ப்பால் அளவில், கிட்டத்தட்ட பாதி அளவுக்கு பிருந்தாவின் பங்களிப்பு இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செல்வ பிருந்தா கூறுகையில், சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளும், மூடநம்பிக்கைகளும் பல தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வருவதைத் தடுக்கின்றன. தொடக்கத்தில் உடல் எடை குறைந்தாலும், மருத்துவரின் விளக்கத்தை அடுத்து, மனஉறுதியுடன் தொடா்ந்து தாய்ப்பால் தானமளித்து வருகிறேன். என்னால் பல குழந்தைகளின் பசியைப் போக்க முடிவது மிகுந்த மனதிருப்தியை அளிக்கிறது என்றாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார ... மேலும் பார்க்க

3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு

தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகே... மேலும் பார்க்க

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு

துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளை... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டியில் பாலக்காடு ரயில்வே கோட்ட அணி சாம்பியன்

திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் பாலக்காடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 4 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற போட்டியில் திருச்சி... மேலும் பார்க்க

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேக்கம்: மாணவா்கள் பாதிப்பு

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் முறையான வடிகால் வசதியில்லாமல், மழைநீா் தேங்கி நிற்பதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே, அரசு தொடக்கப... மேலும் பார்க்க