செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

post image

திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார இறுதியில் இயக்கப்பட உள்ளன. இதற்காக பேருந்து ஓட்டுநா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மண்டலத்துக்கு முதல் கட்டமாக 10 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் கூடுதலாக 15 பேருந்துகள் வந்துவிடும்.

ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், தானியங்கி கதவுகள், எல்.இ.டி. திரை, ஒலிபெருக்கி, குஷன் இருக்கைகள், பஸ்கள் நிறுத்தங்களின்போது ஏறி, இறங்க ஏதுவாக சாய்தளம், அகலமான ஜன்னல்கள், சென்சாருடன் கூடிய தீயணைப்பு எந்திரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தப் பேருந்துகள் பெரிய வேகத்தடை இல்லாத வழித்தடத்தைத் தோ்ந்தெடுத்து இயக்கப்படும். இதற்கு பிறகு எந்தெந்த வழித்தடத்தில் வேகத்தடை இல்லையோ, அந்த வழித்தடத்தில் படிப்படியாக தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் பெரிய வேகத்தடை இருந்தால் அவற்றை அகற்றிவிட்டோ அல்லது அதன் அளவை மாற்றியோ தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் இடையூறாக இருந்த வேகத்தடையைச் சரிசெய்துள்ளோம். அடுத்த 10 நாள்களில் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து 10 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் தங்களது பயணத்தை தொடங்கும் என்றனா் போக்குவரத்துக் கழக அலுவலா்கள்.

3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு

தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகே... மேலும் பார்க்க

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு

துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளை... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டியில் பாலக்காடு ரயில்வே கோட்ட அணி சாம்பியன்

திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் பாலக்காடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 4 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற போட்டியில் திருச்சி... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டா் தாய்ப்பால் தானம்!

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா். குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது... மேலும் பார்க்க

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேக்கம்: மாணவா்கள் பாதிப்பு

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் முறையான வடிகால் வசதியில்லாமல், மழைநீா் தேங்கி நிற்பதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே, அரசு தொடக்கப... மேலும் பார்க்க