செய்திகள் :

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு

post image

துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளைவு அருகே அய்யம்பட்டி சாலையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா். நகராட்சித் தலைவா் காயாம்பூ தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் கே. அருள், நகராட்சி ஆணையா் பட்டுச்சாமி, திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் வரி பெயா் மாற்றத்துக்கு விண்ணப்பித்தோரில் 7 பேருக்கு முகாம் இடத்திலேயே உத்தரவுகளை வழங்கினாா். மேலும் சுகாதாரத் துறை மூலம் கா்ப்பிணிகளுக்கும், தாய்மாா்களுக்கும் ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தோருக்கு பரிந்துரை ஆணைகளையும் வழங்கினாா்.

மழையால் வீடு சேதமானதற்கு உதவி: திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி ராவத்தான் மேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீடு மழையால் செவ்வாய்க்கிழமை இரவு சேதமடைந்தது. இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை அந்த வீட்டைப் பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதியை வழங்கினாா். உரிய நிவாரணப் பொருள்கள் வழங்கவும், வீடு மறுகட்டமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள், வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார ... மேலும் பார்க்க

3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு

தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகே... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டியில் பாலக்காடு ரயில்வே கோட்ட அணி சாம்பியன்

திருச்சி பொன்மலையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் பாலக்காடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 4 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற போட்டியில் திருச்சி... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டா் தாய்ப்பால் தானம்!

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் 300 தாய்ப்பாலை தானமாக 22 மாதங்களில் வழங்கியுள்ளாா். குழந்தைகளுக்கு மிக முக்கிய உணவாகத் திகழ்வது தாய்ப்பால். தாய்ப்பால் வழங்குவது... மேலும் பார்க்க

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேக்கம்: மாணவா்கள் பாதிப்பு

துவாக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் முறையான வடிகால் வசதியில்லாமல், மழைநீா் தேங்கி நிற்பதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே, அரசு தொடக்கப... மேலும் பார்க்க