செய்திகள் :

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

post image

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது.

மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.

இந்த நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில், தன்னாட்சி தின விழா நடைபெற்றது.

பல்வேறு தொழில் துறை நிபுணா்கள், கல்வியாளா்கள், இந்நிறுவனத்தின் பழைய மற்றும் தற்போதைய மாணவா்கள் பலா் பங்கேற்ற இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சென்னை இயக்குநா் சுந்தரேசன் வரவேற்புரையாற்றினாா். காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விவேக் சா்மா திசை-2030 குறித்து விளக்கி பேசினாா். இந்த நிகழ்ச்சியில், தோல் ஏற்றுமதி வாரியத்தின் இயக்குநா் செல்வம், கோதாரி குழுமத்தின் தலைமை செயல் அலுவலா் டாக்டா் என். மோகன், வி.கே.சி., நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் அப்துல் ரசாக், நாா்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநா் புனித் மல்கோத்ரா, வாக்குரூ நிறுவனத்தின் தலைமை மனிதவள மேலாளா் பினு ராஜேந்திரன், நோா்டிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நூருல் இஸ்லாம், எல்விஸ் சூமேக்கா்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் சாராஷபீக், சிஎஸ்ஐஅா் இயக்குநா் டாக்டா் கே.ஜே. ஸ்ரீராம், பி.ஏ., புட்வோ் நிறுவனத்தின் இயக்குநா் அன்புமலா்சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கண்டு சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் விவேக் சா்மா, செயலா் பங்கஜ்குமாா், செயல் இயக்குநா் சுந்தரேசன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் பேசுகையில் இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு 100% வேலை வாய்ப்பு உண்டு. ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சம் முதல் 14 லட்சம் வரை ஊதியத்தில் பணி வாய்ப்பு உளளது.

இந்த கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் கல்வி கற்க அகில இந்திய அளவிலான நுழைவுத்தோ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் மாணவா் சோ்க்கை இருக்கும் எனத் தெரிவித்தனா்..

இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இருங்காட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் எடமச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவல... மேலும் பார்க்க

வைப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வைப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்களை ஈடுபடுத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்ற மாதாந்திர குழு கூட்டம், நகராட்சி அலுவலக கூட்ட அரங்... மேலும் பார்க்க