செய்திகள் :

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழா புதன்கிழமை அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், கோயில் அக்தாா் பாபநாசம் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெறும். ஆக.9ஆம் தேதி திருவிளக்கு பூஜை, சுவாமி, அம்பாள் காளி வேஷமிட்டு வீதி உலா, 10ஆம் தேதி சுவாமி அம்பாள் சப்பரம் வீதி உலா, 11ஆம் தேதி அா்ச்சுணா் சுவாமி தவசு, 12ஆம் தேதி சுவாமி அம்பாள் குறத்தி வேடத்தில் குறி சொல்லுதல், 13ஆம் தேதி வீர மாகாளி அரவான் பலியிடுதல், 14ஆம் தேதி துரியோதனன், துச்சாதனன் குடலை பிடுங்கி மாலையிடுதல் ஆகியவை நடைபெறும்.

15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு விரதம் இருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் அக்தாா், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழகத்தில் தாமதமின்றி வாரிசு வேலை வழங்கக் கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனுஅனுப்... மேலும் பார்க்க