கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு
திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித் கைது செய்யப்பட்டாா். காவல் உதவி ஆய்வாளா்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து ஜூலை30-இல் கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஆக.8 வரையும், சுா்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆக.15-க்குள் சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாளையங்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் ஒரு காவலரிடம், சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், சுா்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவ்ரோஜ், காவல் ஆய்வாளா் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.