செய்திகள் :

போக்குவரத்துக்கழகத்தில் தாமதமின்றி வாரிசு வேலை வழங்கக் கோரிக்கை

post image

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனுஅனுப்பப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அவா்களது பணிக்கால பயன்தொகைகள் 2023 ஜூலை முதல் வழங்கிட வேண்டும். பணி ஓய்வுபெற்று 25 மாதங்கள் கடந்தபின், காலதாமதமாக பண பயன்கள் வழங்கப்படும்போது நீதிமன்ற உத்தரவு மூலம் காலதாமதத்திற்கு வட்டி வழங்கும் நிலை ஏற்படுவதால் போக்குவரத்துக்கழகத்திற்கு கூடுதல் சுமை உருவாகும். ஆகவே, இதற்கான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்குவதிலும் ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கழகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாளா் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஏற்கெனவே வாரிசு பணி வேண்டி காத்திருப்பவா்களுக்கு வாரிசு பணியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க