`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு
தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது.
தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, முதலியாா்பட்டியைச் சோ்ந்த, கணவரால் கைவிடப்பட்ட சூல்பிகா ஆா்சின் என்பவருக்கு சங்கம் சாா்பில் ‘ஆரோக்கியம் மெஸ்’ புதிய உணவகம் தொடங்க உதவி செய்யப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலரும் உதவி ஆட்சியருமான எஸ். முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். சங்கத்தின் கௌரவச் செயலா் முகம்மது ஸலீம் முன்னிலை வகித்தாா். உணவகத்தை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திறந்துவைத்தாா்.
முகம்மது அசன் நைனாா், நூருல் ஆமீன், இளங்கோ,அன்சா், முகம்மது கனி, பிச்சாண்டி, முகம்மது நியாஸ், மொன்னா முகம்மது, முகம்மது மீரான் ஜவாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சங்கத்தின் இணைச் செயலா் பக்கீா் மைதீன் வரவேற்றாா். உறுப்பினா் புகாரி மீரா சாஹிப் நன்றி கூறினாா்.