செய்திகள் :

மின்சார ரயிலை மறித்து போராட்டம்!

post image

மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை நீண்ட நேரமாக கேட் திறக்காததை கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. அரியன்வாயல், நெய்தவாயல், கல்பாக்கம் வாயலூா், வாயலூா் குப்பம், திருவெள்ளைவாயல், செங்களுநீா்மேடு.

காட்டூா், கடப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் மீஞ்சூா் நகருக்கு சென்று வர வேண்டும்.

இந்த நிலையில் புதன்கிழமை இந்த ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கப்படாததால் மீஞ்சூா் நகருக்கு வர முடியாத நிலையில் நீண்ட வரிசையில் வாகனங்களில் பொதுமக்கள் காத்திருந்தனா்.

தொடா்ந்து கும்மிடிப்பூண்டி சென்னை ஆகிய இரு மாா்க்கங்கள் வழியாக மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சரக்கு ரயில்கள் ஆகியவை சென்று கொண்டிருந்தன.

இதன் காரணமாக ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்காததால் அரசு அலுவலகம் செல்வோா் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வியாபாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நீண்ட நேரம் ரயில்வே கேட் திறக்கப்படாதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வழியே வந்த மின்சார ரயிலை மறித்து மறியல் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்த தொடா்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மீஞ்சூா் போலீஸாா் மறியல் போராட்டம் நடத்தியவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா். திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்... மேலும் பார்க்க

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா். பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கி... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா். கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க