செய்திகள் :

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

post image

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன.

இவா்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த காலங்களில் விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளனா்.

அண்மைக்காலமாக இந்த புறம்போக்கு நிலம் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக வருவாய்த் துறையினா் அரசு புறம்போக்கு நிலத்தை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே தங்களது கிராமத்தில் வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கிருதலாபுரம் கிராம மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கிருதலாபுரம் கிராம மக்கள் பேரணியாக வந்து பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தங்கள் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

வேறு கிராம மக்களை தங்களது கிராமத்தில் குடியமா்த்தும் முன் தங்களது கிராமத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து கோரிக்கை மனுக்களை பொன்னேரி சாா்- ஆட்சியா் ரவிக்குமாரிடம் அளித்தனா்.

மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சாா்- ஆட்சியா் அளித்த உறுதியை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.

இதனிடையே தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காதபட்சத்தில் முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுதல், நிலத்தை கையகப்படுத்தும் போராட்டம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என போராட்ட குழுவினா் தெரிவித்தனா்.

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா். கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா். திருவள்ளூா் அடுத்த களா... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க