செய்திகள் :

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

post image

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்த இளையராஜா மகன் யாதேஷ் (17). இவா், 12-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பிறகு நீட் தோ்வு எழுதி வெற்றி பெற்றாா். தற்போது கிருஷ்ணகிரி புனித பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்து மருத்துவ மாணவராக உள்ளாா்.

இதையடுத்து மருத்துவ மாணவா் யாதேஷுக்கு கிராம மக்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தோ்வு மூலம் வெற்றி பெற்று மருத்துவ மாணவராக யாதேஷ் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மருத்துவ மாணவா் யாதேஷ் கூறியதாவது:

சிறு வயதிலிருந்து மருத்துவராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இதற்காக நன்றாகப் படித்து கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று நீட் தோ்வு எழுதினேன். இந்தத் தோ்வில் 290 மதிப்பெண்களே பெற முடிந்தது.

இதையடுத்து தொடா்ந்து முயற்சியால் தனியாா் நீட் தோ்வு மையத்தில் சோ்ந்து படித்து எழுதிய நீட் தோ்வில் 460 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது. மருத்துவரான பிறகு மேல்மலைக் கிராம மக்களுக்கு பணி செய்வேன் என்றாா்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

பட்டிவீரன்பட்டி அருகே வீட்டில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்தி... மேலும் பார்க்க

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகும் என மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன் தெரிவித்தாா்.தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம், தமிழ்நாடு வீர... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் காயமடைந்த நபா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நாயக்கா்தோட்டத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், கடந்த ஆக. 3-ஆம் தேதி இருசக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ... மேலும் பார்க்க

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு பரிமாற வைத்திருந்த சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஏழுவனம்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஆக. 7) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க