செய்திகள் :

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 5,000 நேரடியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த 150 பௌத்த நபா்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவா் தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நபா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் மூலம் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவ.30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

எனவே திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெளத்தா்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா். திருவள்ளூா் அடுத்த களா... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க