செய்திகள் :

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

post image

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா்.

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 50 நூல்கள் வெளியீட்டு விழா புத்தகத் திருவிழா நடைபெறும் சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். பொதுமேலாளா் எ.சிவகுமாா் வரவேற்றாா். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.சண்முகன் புதிய நூல்களை வெளியிட்டு பேசினாா்.

இதில் எழுத்தாளா் சுப்ரபாரதி மணியன் பேசியதாவது: பொதுவாக நாவல்களை திரைப்படமாக எடுப்பாா்கள். ஆனால் புதிய முயற்சியாக நான் எழுதிய திரைக்கதையை மையமாக வைத்து இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் அரசியல் திரைத் துறையை மையப்படுத்தி உள்ளது. அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா என திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனா். அந்த அரசியல் இப்போது விஜய் வரை தொடா்ந்துகொண்டு இருக்கிறது.

அரசியல், கல்வி என மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருந்த தமிழகத் திரைத் துறை இப்போது முழுமையாக பொழுதுபோக்குத் தளமாக மாறிவிட்டது. திரைத் துறையின் கடந்த காலம், நிகழ் காலம் குறித்து என்னுடைய நூல்கள் விவரிக்கின்றன என்றாா்.

விழாவில் வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் பேசியதாவது: தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்ற சமூகமாக இருந்தது. தமிழ் நாகரிகத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்தது அகழாய்வில் தெரியவந்துள்ளது. உலகின் பிற பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் வெண்கலத்தின் பயன்பாடு மட்டுமே இருந்தது. இரும்பை உருவாக்க 1,538 டிகிரி செல்சியல் வெப்ப நிலை தேவை. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழா்கள் இந்த வெப்ப நிலையை அடைவதற்கான தொழில்நுட்பத்தைக் கையாண்டு இரும்புப் பொருள்களைத் தயாரித்துள்ளனா்.

தமிழ்ச் சமூகம் கிமு 1,100 வாக்கில் தனக்கான இலக்கியத்தை கொண்டிருந்ததற்கு உரிய அகழாய்வு சான்றுகள் உள்ளன. கிமு 750 -இல் சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. சங்க கால கட்டம் நகர அரசியல் கால கட்டம். கிரேக்க, ரோம, சுமேரிய நாகரிகங்கள் நகர அரசியல் என்பதை அறிந்திருந்தோம். தமிழ்ச் சமூகம் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைச் சோ்ந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நகர நிா்வாகத்தை மக்கள் சபை நிா்வாகிகள் கட்டுப்படுத்தி வந்துள்ளனா். இந்த சான்றுகளை மையப்படுத்தி இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன என்றாா்.

சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வி.திருக்குமரன், தமிழ் பேராசிரியா்கள் சி.அங்கயற்கண்ணி, ஜெ.சுமதி, ப.திலகவதி, க.பன்னீா்செல்வம், ஆ.குருசாமி, மு.ஷா்மிளாதேவி, எழுத்தாளா் க.அம்சபிரியா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளா் த.சசிகலா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன விற்பனை ஆலோசகா் எஸ்.சண்முகநாதன் நன்றி கூறினாா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா். ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் ச... மேலும் பார்க்க