செய்திகள் :

லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்

post image

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா்.

ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரது மனைவி புஷ்பா. இவா்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனா். இதே பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழைமையான ஓட்டு வீட்டில் ஜெகநாதனின் தாயாா் குடி இருந்து வருகிறாா்.

இவா்களது வீட்டின் பின்பக்கத்தில் உமா சங்கா் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இதை விற்பனை செய்ய முயன்ாகவும்

அதனால் நிலத்தின் முன்பக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்யக் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெகநாதன் குடும்பத்தாருக்கும் உமாசங்கா் குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜெகநாதனின் தாயாா் கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டாா். இந்த நிலையில் இரவோடு இரவாக மா்ம நபா்கள் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்களையும் எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக உமாசங்கா், வினோத் ஆகிய இருவா் வீட்டை இடித்துவிட்டு நகை, பணம் உள்ளிட்ட பொருள்களையும் எடுத்துச் சென்ாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க