பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்...
திருப்பூரில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல்; 30 லட்சம் நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்
திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எஸ்.எஸ்., சண்முகவேல் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இருக்கிறார். மேலும் 30 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.