செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

post image

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக ஒடிசாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது.

நரி நியாய யாத்திரை ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை தொடரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் தெரிவித்தார்.

பூரியின் பலங்காவில் பெண் ஒருவரை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் மூன்று பேரை கைது செய்யக் கோரி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்டாக்கில் உள்ள டிஜிபி அலுவலகத்தைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் முற்றுகையிடுவார்கள் என்று அவர் கூறினார்.

குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறைக்கு ஏழு நாள் அவகாசம் அளித்து இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பலங்காவில் உள்ள சிறுமியின் கிராமத்தில் காங்கிரஸ் 'யாத்திரை' நடத்தும். இந்தப் பேரணி சிறுமியின் கிராமத்திலிருந்து தொடங்கி நிமபாடா நகரத்தை அடையும். அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும்.

பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாஸ் வலியுறுத்தினார்.

ஜூலை 19 அன்று சிறுமியை மூன்று பேர் தீ வைத்து எரித்ததாகச் சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆகஸ்ட் 2 அன்று அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று போலீஸார் கூறினர்.

பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரில் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து தீக்குளித்ததாகக் கூறப்படும் மாணவிக்கு நீதி கோரி, ஆகஸ்ட் 14 அன்று பாலசோரிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்படும் என்று தாஸ் கூறினார்.

The opposition Congress in Odisha on Wednesday announced a series of demonstrations it will hold in various districts to protest the rise in crimes against women.

அவதூறு வழக்கில் ராகுலுக்கு நிபந்தனை ஜாமீன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் பு... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரி... மேலும் பார்க்க

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்... மேலும் பார்க்க

விடைபெறுகிறது பதிவு அஞ்சல்! கட்டணம் அதிகரிக்குமா? யாருக்கு சிக்கல்?

பதிவு அஞ்சல் முறையில் கடிதங்களை அனுப்பும் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், முக்கிய கோப்புகளை பத்திரமாக அனுப்புவதற்கான சேவை என்று மக்களால் இதுநாள்வரை நம்பப்பட்டுவந்த ஒரு ச... மேலும் பார்க்க