செய்திகள் :

வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி

post image

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களைச் சேர்ப்பது தவறானது, அதுவும் ஒரு ஊழல்தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்வதற்காக சென்னையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"வட மாநிலத்தவர்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவறான செயல். இதுவும் ஒரு ஊழல்தான். மேற்கு வங்கம்போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 7 லட்சம் அல்ல, அதற்கு மேல் எவ்வளவு சேர்த்தாலும் பரவாயில்லை. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

இன்னும் தேர்தலுக்கு 8 மாத காலங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.

திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐ வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, டிஜிபி அளவில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இதைப் பற்றி முதல்வர் கண்டுகொள்வதில்லை. ரிவ்யூ மீட்டிங்கூட செய்வதில்லை. இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது" என்று கூறினார்.

ஓபிஎஸ் காட்டிய குறுஞ்செய்திதான் ஆதாரமா? என்று கேட்டதற்கு 'அதை அவரிடமே கேளுங்கள்' என்று தெரிவித்தார்.

Tamil Nadu BJP leader Nainar Nagendran has said that it is wrong to include people from northern states in the Tamil Nadu voter list.

இதையும் படிக்க | காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று (ஆக. 6) மனுத்தாக்கல் செய்தது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய ... மேலும் பார்க்க

காலமானார் ஓ.எம். துரைசாமி

ஈரோடு: கோபி சின்ன மொடச்சூரை சேர்ந்த ஓ.எம்.துரைசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.கோபி எம்ஜிஆர் சிலை அமைப்புக்குழு பொருளாளராக இருந்துள்ள ஓ.எம்.துரைசாமிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ... மேலும் பார்க்க

விஜயகாந்த் புகைப்படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது! - பிரேமலதா

எந்த கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜயகாந்த் படத்தை எக்காரணம் க... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 1. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.2. தென் ... மேலும் பார்க்க

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 6) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற... மேலும் பார்க்க