செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

post image

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

உத்தரகாசியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் இதுவரை 4 போ் உயிரிழந்ததாகவும், 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும், தொடர் கனமழை பெய்து வருவதாலும் பிரயாக்ராஜ், அயோத்தி வாரணாசி ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில், கின்னௌர் கைலாஷ் யாத்திரைப் பாதையில் சிக்கித் தவித்த 413 பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

துணை ஆணையர் ஜெனரல் மொஹ்சென் ஷாஹேடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அவசரக்கால படையின் மூன்று குழுக்கள் தராலி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தன, ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலை தடைப்பட்டதால் தாமதமாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக டேராடூனில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் விமானம் மூலம் செல்வதும் தடைப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராணுவம், ஐடிபிபி மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சுமார் 150 பேரை மீட்டுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளதாகவும், காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளதாகவும், பாதை சரியானதும் அவர்கள் அங்குச் செல்வார்கள் என்று கூறினார்.

About 150 people have been rescued from Uttarakhand's Uttarkashi, struck by flash floods a day ago, even as 11 army troops remain missing, an NDRF officer said on Wednesday.

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்த... மேலும் பார்க்க

உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்கா 11% பங்களிப்பு; ஆனால் இந்தியா 18%!

பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்... மேலும் பார்க்க

உங்கள் பாதங்களைக் கழுவவே கங்கை வெள்ளம்: உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்... மேலும் பார்க்க

பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின்பிஜாப்பூர்மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில்நக்சலைட்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நக்சலைட்எதிர்ப்பு நடவடிக்கை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் ... மேலும் பார்க்க

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டன.ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆ... மேலும் பார்க்க