செய்திகள் :

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

post image

இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.

டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆனால், இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் கூறிய இந்தியாவில்தான், அவரது நிறுவனமும் அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இருப்பினும், இதுபற்றி அவர் உலக அரங்குக்கு எதுவும் தெரிவிக்க மறுப்பதேனோ?

இந்திய கட்டுமானத் துறையில் டிரம்ப்பின் நிறுவனம், 2011-லிருந்து பெரும் முதலீடுகளை செய்துள்ளது.

2011-லிருந்து கடந்த 2024 (சுமார் 13 ஆண்டுகளாக) வரை 3 மில்லியன் சதுர அடிக்கு மட்டுமே கட்டடங்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஆனால், கடந்த நவம்பரில் அதிபராக தேர்வானதிலிருந்து ஓராண்டில் (வெறும் 9 மாதங்களில்) மட்டும் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. 3 மில்லியன் சதுர அடி திட்டத்தை, கடந்த ஓராண்டில் மட்டும் 11 மில்லியனாக டிரம்ப் நிறுவனம் அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 3 மடங்குகொண்ட அசுர வளர்ச்சியே.

Trump real-estate footprint in India expands 3-fold to 11 million sq feet

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க