செய்திகள் :

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

post image

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து வரும் நபர்

கீர்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை அடித்துக் கொண்டு சென்றது. ஒரு நொடியில், அங்கிருந்த வீடுகள், கட்டடங்கள், கடைகள் என அனைத்தையும் தன்னுடைய ஆக்ரோஷ சப்தத்துடன் வெள்ளம் வாரிச் சுருட்டிச் சென்றது. ஒரு சில வினாடிகளில் எதுவும் இருந்த இடத்தில் இல்லை. இந்த காட்சிகளை இணையம் மூலம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு அவ்வளவு அதிர்ச்சி.

இந்த நிலையில்தான், வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் உயிரோடு எழுந்து நடந்து வரும் விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.

இதுவரை 50 பேர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் இறங்கியிருக்கிறார்கள். அங்கே இருந்த ராணுவ முகாமும் பலத்த சேதமடைந்துள்ளது. ஒரு சில வீரர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

தாராலியின் பெரும்பாலான பகுதிகள் 20 - 25 அடி உயர வெள்ளச் சேறில் சிக்கியிருக்கிறது. இதனால், மீட்புப் பணிகள் சவாலாக மாறியிருக்கிறது. உயிர்களைக் காக்க, மீட்புப் படையினர் கடுமையான சிரமங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 600 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்த... மேலும் பார்க்க

உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்கா 11% பங்களிப்பு; ஆனால் இந்தியா 18%!

பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்... மேலும் பார்க்க

உங்கள் பாதங்களைக் கழுவவே கங்கை வெள்ளம்: உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்... மேலும் பார்க்க

பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின்பிஜாப்பூர்மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில்நக்சலைட்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நக்சலைட்எதிர்ப்பு நடவடிக்கை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் ... மேலும் பார்க்க