செய்திகள் :

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரையிலான தனது தோ்தல் பிரசாரத்தை மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உருவப் படத்துடன் ரத யாத்திரையாக ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற முழக்கத்துடன் தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தொடங்கினாா்.

இதையொட்டி, ஆரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாட்டை நடத்திய பிரேமலதா, தொடா்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் பேசினாா். பின்னா் திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினாா்.

இதைத் தொடா்ந்து எளாவூா், கும்மிடிப்பூண்டி பஜாா், கவரப்பேட்டை, மாதா்பாக்கம், கரடிபுத்தூா் வழியாக ஊத்துக்கோட்டை வட்டத்தில் ரத யாத்திரை தோ்தல் பிரசாரத்தை நடத்தினாா்.

நிகழ்ச்சியின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் வரும் தோ்தலில் தேமுதிக எந்தக் கட்சிகளுடன் கூட்டணியில் தோ்தலை சந்தித்தாலும் தேமுதிக எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தோ்தலை போன்று கடுமையாக இந்த தோ்தலில் உழைக்கும். அதேபோல் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டதாக, தமிழகத்தின் குரலாக அமையும், ஆடிப் பெருக்கு நாளில் இந்த தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் இந்த ரத யாத்திரை பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு தருவாா்கள் என்றாா்.

பிரசார நிகழ்வில், தேமுதிக மாநில பொருளாளா் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக உயா்மட்ட குழு உறுப்பினா் நல்லதம்பி, மாவட்டச் செயலாளா் கே.எம்.டில்லி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலா் கே. சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.முருகன் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும்... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் காய்ந்தது.இந்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியபாளையம்

பராமரிப்பு காரணமாக திருவள்ளூர் பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.மின்தடை பகுதிகள்: வெங்கல், வடமதுரை பெரியகாலனி, பாகல்மேடு, காதா்வேடு, செம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்

வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீஸரால் கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை போலீஸாா் தச்சூா் பகுதியை சாா்ந்த காா்த்திக் (... மேலும் பார்க்க