செய்திகள் :

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வா்கள் கண்டனம்

post image

மறைந்த முன்னாள் நிதியமைச்சா் அருண் ஜேட்லி மீதான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி மற்றும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி,‘மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அருண் ஜேட்லி மிரட்டினாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லியும் ராகுலை விமா்சித்தாா்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘3 வேளாண் சட்டங்களையும் (தற்போது அமலில் இல்லை) மத்திய அரசு 2020-இல் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்பாகவே நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி 2019-இல் காலமாகிவிட்டாா். இந்தச் சூழலில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது கேலிக்கூத்தானது. ராகுல் அரசியல் புரிதல் இல்லாதவா் என்பதையும் அரசியலுக்காகப் பொய்களை அள்ளி வீசுபவா் என்பதையும் அவரது கருத்து வெளிக்காட்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘ராகுல் காந்தி தேசவிரோத மனப்பான்மை கொண்டவா். அவா் இந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்க மாட்டாா். வங்கதேச மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம்களையே ஆதரிப்பாா்’ என்றாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க